search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்வரத்து சரிவு"

    • ஒகேனக்கிலில் நீர் வரத்து 8 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
    • பரிசல் இயக்க 4-வது நாளாக தடை.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் தமிழகத்திற்கு நேற்று 3 ஆயிரம் கனஅடி அளவில் திறந்து விடப்பட்டது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும், கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீராலும் தமிழக கர்நாடகா எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 13 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை, 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்த தால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்து இன்று காலை நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இருந்தபோதிலும், அங்குள்ள மெயினருவி, ஐந்தருவி, ஐவர்பாணி ஆகிய அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகளின் பாது காப்பு கருதி, ஒகேனக்கல்லில் பரிசல் சவாரிக்கு கடந்த 12-ந் தேதி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த நிலையில் இன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடி அளவில் தண்ணீர் குறைந்து வந்தபோதிலும், இன்று 4-வது நாளாக பரிசல் இயக்க தடை நீடித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

    விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லுக்கு இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.பின்னர் சுற்றுலா பயணிகள் எண்ணை மசாஜ் செய்து கொண்டு அருவி களில் குளித்து மகிழ்ந்தனர்.

    பரிசல் இயக்க தடை நீடிக்கப்பட்டிருந்தால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் பரிசல் நிலையம், கடைவீதி, மீன் கடை ஆகிய பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டன.

    கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் தொடர்ந்து திறந்து விட படுவதால், பிலிக்குண்டு லுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்கா ணித்து வருகின்ற னர்.

    • மழை குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 415 கன அடியில் இருந்து 300 கன அடியாக சரிந்து உள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 47.97 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது.

    இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் முல்லைப்பெ ரியாறு அணைக்கு நீர்வரத்து 415 கன அடியில் இருந்து 300 கன அடியாக சரிந்து உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 400 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 118.80 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.97 அடியாக உள்ளது. அணைக்கு 286 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.80 அடியாக உள்ளது. 64 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. ேசாத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.19 அடியாக உள்ளது. 21 கனஅடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 1.4, மஞ்சளாறு 11, சோத்து ப்பாறை 2, பெரியகுளம் 2.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
    • மழை அளவு குறைந்ததால், ஒகேனக்கல்லில் இன்று நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக சரிந்து வந்து கொண்டிருந்தது. இன்று 2-வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது.

    ஓகேனக்கல்:

    காவிரி மேலாண்மை வாரிய உத்தரவின் பேரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 9 ஆயிரத்து 70 கனஅடி தண்ணீரை அந்த மாநில அரசு திறந்துவிட்டுள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம் பாளையம், பிலிகுண்டுலு, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. அதன்படி நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. மழை அளவு குறைந்ததால், நீர்வரத்து படிபடியாக குறைந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதன் காரணமாக பரிசல்கள் காவிரி ஆற்றில் கவிழ்த்து வைக்கப்பட்டு இருந்தன. இதனை தொடர்ந்து வாரவிடுமுறை நாளான இன்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டதால், பரிசலில் சவாரி செய்யமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்து ள்ளது.
    • நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    பென்னாகரம்,

    கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்துள்ளது.

    இதனால் நேற்று ஒகேன க்கல்லுக்கு வினாடிக்கு 6,500 கனஅடியாக தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்து ள்ளது.

    இதனால் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு லுவில் மத்திய நீர்வளத்து றையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது.
    • நீர்வரத்து வினாடிக்கு 6,500 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    பென்னாகரம்,

    கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்துள்ளது.

    இதனால் நேற்று ஒகேன க்கல்லுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்து ள்ளது.

    இதனால் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 6,500 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு லுவில் மத்திய நீர்வளத்து றையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • பருவமழை காரணமாக முக்கிய ஆறுகளான வராகநதி, வைகை, முல்லைபெரியாறு, கொட்டக்குடி ஆகியவற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
    • கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கிய போது கேரள மாநிலம், மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் அனைத்து அணைகளும் நிரம்பி உபரிநீர் திறக்க ப்பட்டது. முக்கிய ஆறுக ளான வராகநதி, வைகை, முல்லைபெரியாறு, கொட்டக்குடி ஆகியவற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 136.55 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1398 கனஅடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 69.82 அடியாக உள்ளது. 966 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1269 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. மஞ்சளாறு அணை யின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 100 கனஅடிநீர் வருகிறது. 40 கனஅடிநீர் பாசனத்திற்கும், 60 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணை யின் நீர்மட்டம் 126.54 அடியாக உள்ளது. 140 கனஅடிநீர் வருகிறது. 90 கனஅடிநீர் உபரியாகவும், 30 கனஅடி நீர் பாசனத்தி ற்கும் திறக்கப்படுகிறது. போடியில் மட்டும் 2.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 3300 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக வெளி யேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது.

    இதன் காரணமாக அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.

    இன்று 19-வது நாளாக பவானிசாகர் அணை 102 அடியில் நீடித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3300 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் 3,400 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வந்தது
    • பாலாற்றில் அதிகபட்சம் 320 கனஅடி அளவுக்கு தண்ணீர் வெளியேறியது

    வேலூர்:

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பெய்து வந்த தொடர் மழை குறைந்த நிலையில், பாலாற்றில் நீர்வரத்து சரிந்துள்ளது.

    வேலூரில் வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1,400 கனஅடி வரை இருந்த நீர்வரத்து சனிக்கிழமை 1,100 கனஅடிக்கும் கீழ் குறைந்து காணப்பட்டது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பகல், இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வந் தது. இதனால், முக்கிய ஆறு கள், ஓடைகளில் நீர்வரத்து ஏற் பட்டுள்ளது.

    இதேபோல், தமிழகத்தையொட்டி உள்ள ஆந்திர மாநில எல்லை வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்து வருவதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் இருந்து பாலாற்றில் அதிகபட்சம் 320 கனஅடி அளவுக்கு தண்ணீர் வெளியேறியது.

    திருப்பத்தூர்,வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, வாணியம்பாடி அரு கேயுள்ள மண்ணாறு, கல்லாற்றில் இருந்து தலா 100 கன அடி தண்ணீர் பாலாற்றுக்கு வந்து கொண்டிருந்தது. மேலும், மலட்டாற்று, வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன்மூலம், பள்ளிகொண்டா பகுதியில் பாலாற்றில் வெள்ளிக் கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,400 கனஅடியாகவும், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் 1,500 கன அடியாகவும் நீர்வரத்து ஏற்பட்டிருந்தது.

    இந்த நிலையில், வெள்ளி, சனிக்கிழமை மழை பொழிவு குறைந்த நிலையில், பாலாற்றில் நீர்வரத் தும் சரிந்து காணப்பட்டது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த ஒரு வாரமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலும், ஆந்திர வனப் பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் பாலாற்றிலும், அதன் துணை ஆறுகளிலும் நீர்வரத்து ஏற்பட்டிருந்தது.

    தற்போது மழை நின்றுவிட்டதால் படிப்படியாக நீர்வரத்து சரிந்துள்ளது.

    தவிர, தற்போது பெய்திருப் பது பருவமழை இல்லை. வடகி ழக்குப் பருவமழை அக்டோபர் மாதத்திலேயே தொடங்கக்கூடும். எனினும், திடீர் மழை காரணமாக பாலாற்றிலும், துணை ஆறுகளிலும் வரும் வெள்ளத்தின் அளவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.

    ×